பேடிஎம் ட்ராபியை அசால்ட்டாக வெல்லும் கேப்டன் விராட் கோலியால் ஐசிசி, ஐபிஎல் கோப்பையை ஏன் முடியல - ஒரு அலசல்

ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை 2021 தொடரில் இந்தியா அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியுள்ளது.

Virat Kohli : Photo Credits - BCCI


கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியாகக் கருதப்பட்ட இந்தியா இந்த உலக கோப்பையின் முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக பெற்ற படு தோல்வியில் இருந்து கடைசிவரை மீண்டெழ முடியாமல் தோற்றது.

விடைபெற்ற விராட் கோலி:

இந்த உலக கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாத காரணத்தால் இந்தியாவின் டி20 கேப்டன் பதவியிலிருந்து ஏற்கனவே அறிவித்தபடி விராட் கோலி விடைபெற்றார். அதேபோல் ரவிசாஸ்திரி, பரத் அருண் ஆகியோர் அடங்கிய தலைமை பயிற்சியாளர் குழுவும் விடைபெற்றது.

  • இதனால் ஒரு டி20 கோப்பையை வெல்ல வேண்டும் என்ற விராட் கோலியின் கனவு கடைசிவரை பலிக்காமல் போனது.
  • இதை அடுத்து இந்தியாவின் டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் புதிய பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டெஸ்டில் ஜொலிக்கும் விராட் கோலி :

கடந்த 2014 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி 2017 க்குப் பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டு வந்தார், இவர் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2016 முதல் தொடர்ந்து 4 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் அணியாக இந்தியா ஜொலித்தது.

அத்துடன் வெளிநாடுகளில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அவர் தலைமையில் இந்தியா வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது, குறிப்பாக ஆஸ்திரேலியாவை 71 ஆண்டுகளுக்குப் பின் அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இந்தியா அடுத்த அடுத்த 2 டெஸ்ட் தொடர்களை வென்று சரித்திரம் படைத்தது.

  • தற்போதைய நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக எம்எஸ் தோனி, சவுரவ் கங்குலி ஆகியோரையும் முந்தி விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

உலககோப்பை சோதனை:

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கூட விராட் கோலி தலைமையில் வெளிநாடுகளில் முதல் முறையாக பல நினைத்து பார்க்க முடியாத வெற்றிகளைப் பெற்றது எடுத்துக்காட்டாக கடந்த 2018இல் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வீழ்த்தி இந்தியா அசத்தியது.

மேலும் நியூஸிலாந்தை அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் வீழ்த்தி உலக சாதனை படைத்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் டி20 தொடரை வென்று அசத்தியது.

  • இப்படி உலகம் முழுவதிலும் பல வெற்றிகளை குவித்த கேப்டன் விராட் கோலியால் ஒரு ஐசிசி உலகக் கோப்பையை இதுவரை வெல்ல முடியவில்லை என்பது அவரின் கேப்டன்ஷிப் பயணத்தில் ஒரு கருப்பு புள்ளியாகும்.

2017 சாம்பியன்ஸ் கோப்பை 2019 உலகக்கோப்பை 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 20 ஓவர் உலக கோப்பை என அவர் தலைமையில் இந்தியா இதுவரை 4 உலக கோப்பைகளில் பங்கேற்று வெறும் கையுடன் திரும்பியது.

பேடிஎம் ட்ராபி:

இதனால் விராட் கோலி எப்போதும் பை லேட்ரல் சீரிஸ் எனப்படும் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை வெல்ல தான் சரிப்பட்டு வருவார் உலக கோப்பையை வெல்ல சரிப்பட்டு வரமாட்டார் என சமூக வலைதளங்களில் அவர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் இருந்து வருகிறது, குறிப்பாக சில ரசிகர்கள் விராட் கோலி பேடிஎம் கோப்பையை தான் வெல்வார் உலக கோப்பையை அவரால் வெல்ல முடியாது என கிண்டல் அடிப்பதை பலமுறை பார்த்துள்ளோம்.

ஆஸ்திரேலியாவில் பார்டர் - கவாஸ்கர் கோப்பை உள்ளிட்ட பல சரித்திர வெற்றிகளைப் பெறும் அவரால் ஏன் உலக கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது பற்றி பார்ப்போம்:

1. முதலில் பை லேட்ரல் சீரிஸ் எனப்படும் இரு தரப்பு தொடரில் இந்தியாவின் எதிரி யார் என கேப்டன்ஷிப் செய்யும் விராட் கோலிக்கு நன்கு தெரியும், மேலும் இரு தரப்பு தொடரில் தொடர்ச்சியாக 3 அல்லது 5 போட்டிகள் நடைபெறும்.

அந்த சமயத்தில் எதிரியின் பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றை அவர் கணித்து அதற்கு தகுந்தார்போல் கேப்டன்ஷிப் செய்வார். ஒருவேளை இருதரப்பு தொடரில் எதிரணிக்கு எதிரான முதல் போட்டியில் ஏதேனும் ஒரு தவறு செய்யும் பட்சத்தில் அதை அடுத்த போட்டியிலேயே சரி செய்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது.

அந்த வாய்ப்பை பயன்படுத்தி அடுத்த போட்டியிலேயே அதை சரி செய்து கொண்டு வெற்றியையும் பெறுகிறார் ஏனென்றால் அந்தத் தொடர் முழுவதும் எதிரி ஒருவனாக (ஒரு அணியாக) இருக்கிறான்.

இது விராட் கோலியின் இயற்கையான குணம் என கூறலாம், பேட்டிங்கில் கூட 2வதாக பேட் செய்கையில் வெற்றி இலக்கு தெரிந்துவிட்டால் அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் கூட சிறப்பாக விளையாடி அசால்ட்டாக சேஸிங் செய்வதை நீங்கள் பலமுறை பார்த்திருப்பீர்கள்.

  • இதனாலேயே அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் சேசிங் செய்யும்போது அதிக சதங்களை விளாசி சேஸ் மாஸ்டர் என பெயரும் பெற்றுள்ளார்.

2. இப்போது உலக கோப்பை அல்லது ஐபிஎல் தொடருக்கு வாருங்கள், இது போன்ற தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் எதிரணி மாறிக் கொண்டே இருக்கும்.

  • எனவே அந்த சமயத்தில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு எதிர் அணிக்கும் தகுந்தாற்போல திட்டம் மற்றும் செயல் முறைகளை மாற்ற வேண்டியுள்ளது.

இந்த இடத்தில்தான் விராட் கோலி கேப்டனாக சறுக்குகிறார், ஒவ்வொரு போட்டியிலும் புதிய எதிரி வருவதால் அதற்கு தகுந்தார்போல் திடீரென அவரால் மிகச் சிறப்பான திட்டம் மற்றும் செயல்முறைகளை நடைமுறை படுத்தி வெற்றியை கட்டுக்குள் வைத்திருக்க முடிவதில்லை.

  • அதேபோல் பிரஷர் மிகுந்த மிக மிக முக்கியமான போட்டிகளில் மாற்றம் செய்கிறேன் என்ற பெயரில் ஏதேனும் தேவையற்ற மாற்றத்தை அவர் செய்வதால் அது இறுதியில் அவருக்கு தோல்வியையே பரிசளிக்கிறது.

எடுத்துக்காட்டாக இந்த உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் ரோகித் சர்வாவை 3-வது இடத்தில் களம் இறக்கி இஷான் கிஷனை ஓப்பனிங்கில் களமிறக்கியது இந்தியாவிற்கு மிகப் பெரிய பாதகத்தை அளித்தது.

  • அந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் தருதல் தாக்கூர், வருன் சக்ரவர்த்தி அல்லது புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு பதில் ரவிச்சந்திரன் அஸ்வினை களம் இறக்கினால் போதும் என முன்னாள் ஜாம்பவான்கள் உட்பட பலரும் கருதினார்கள்.

ஆனால் காயமடைந்த சூரியகுமார் யாதவுக்கு பதிலாக கிசானை அதே இடத்தில் களம் இறக்காமல் ரோகித் சர்மாவை களம் இருக்கலாம் என்ற மோசமான திட்டத்தை விராட் கோலியால் மட்டுமே யோசிக்க முடியும்.

இதே நிலைமை தான் ஐபிஎல் தொடரிலும் அவர் கையாள்கிறார் ஒவ்வொரு அடுத்த போட்டிக்கும் ஒவ்வொரு புதிய எதிரணி, தேவைப்பட்டால் அதற்கு தகுந்தார்போல் புதிய திட்டம் அணியில் மாற்றம் என கேப்டன்ஷிப்பில் சொதப்புகிறார்.

Previous Post Next Post

Your Reaction