நடைபெற்று வரும் 2021 ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை டெல்லி கேப்பிடல் அணிக்காக விளையாடும் ஷிகர் தவான் தன் வசம் வைத்துள்ளார்.
![]() |
Shikar Dhawan | Ishan Kishan (Photo : BCCI) |
- அவர் இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 52.75 என்ற சராசரியில் 422* ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார், 2வது இடத்தில் பஞ்சாப் வீரர் கேஎல் ராகுல் 380 ரன்களுடன் உள்ளார்.
இந்த சீசனுடன் சேர்த்து இதுவரை 8 முறை 400க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை ஒரு சீசனில் 400க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த 2வது பேட்ஸ்மேன் என்ற சாதனையும் ஷிகர் தவான் படைத்துள்ளார், முதலிடத்தில் சுரேஷ் ரெய்னா (9 முறை) உள்ளார்.
- குறிப்பாக கடந்த 2016 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு பின் கடந்த 2016 முதல் நடந்த ஐபிஎல் தொடர்களில் இவர் 501, 479, 497, 521, 618, 422* என ஏறத்தாழ 2500 ரன்களுக்கும் மேல் மலைபோல குவித்து வருகிறார்.
இந்த காலகட்டங்களில் இவர் 23 அரை சதங்களும் 2 சதங்களையும் விளாசி அசத்தியுள்ளார்.
இன்னும் சொல்லப்போனால் இந்தியா கடைசியாக விளையாடிய இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாகவும் ஷிகர் தவான் 86 ரன்களுடன் முதலிடம் பிடித்தார்.
டி20 அணியில் இடமில்லை :
இப்படி சிறப்பாக விளையாடி வரும் போதிலும் வரும் அக்டோபரில் துபாயில் நடைபெறும் இருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 இந்திய அணியில் ஷிகர் தவான் இடம்பெறவில்லை.
![]() |
Photo By BCCI |
உலககோப்பை அணியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இடம் பிடித்துள்ளார்கள், அவர்களுக்கு அடுத்த 3வது ஓபனிங் பேட்ஸ்மேனாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இசான் கிசான் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும் தேவைப்பட்டால் மிடில் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மேனாகவும் இருப்பதாலேயே இஷான் கிசான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
என இஷான் கிசான் தேர்வு பற்றி இந்திய தேர்வு குழு வினர் தெரிவித்தார்கள், அதேசமயம் ஷிகர் தவானுக்கு ஓய்வு அளிடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
தடுமாறும் இஷான் கிசான் :
இருப்பினும் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஓபனிங் பேட்ஸ்மேனாகவும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் இதுவரை 7 போட்டிகளில் களமிறங்கிய இஷான் கிசான் வெறும் 98 ரன்களை 14.00 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார்.
மிஸ்டர் ஐசிசி :
இதை பார்க்கும்போது சிறப்பாக செயல்பட்டும் கூட ஷிகர் தவன் வஞ்சிக்கப்படுகிறாரா என்ற கேள்வி நமக்கு தோன்றுகிறது.
பொதுவாகவே ஷிகர் தவானை இந்திய கிரிக்கெட்டின் மிஸ்டர் ஐசிசி என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள் ஏனெனில் ஐசிசி தொடர் என வந்துவிட்டால் இவர் அதிக ரன்களை குவித்து இந்தியாவிற்கு அதிக முறை வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.
அப்படிப்பட்ட அவருக்கு இந்திய உலக கோப்பை அணியில் காத்திருப்பு பட்டியலில் கூட இடம் கிடைக்காதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது.
இருப்பினும் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வரை உலக கோப்பை டி20 இந்திய அணியில் மாற்றங்களை செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு உரிமை உள்ளது.
எனவே தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஷிகர் தவான் இன்னும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அதிர்ஷ்டவசமாக அவருக்கு இந்திய அணியில் கிடைக்கலாம்.