பணம் பேசுகிறது, இந்தியாவுக்கு எதிராக யாரும் வாயை திறக்கமுடியாது - உஸ்மான் கவாஜா

பாகிஸ்தானில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் விளையாடுவதாக இருந்த கிரிக்கெட் சுற்றுப் பயணங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக அடுத்தடுத்து ரத்து செய்தன, இதனால் அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Usman Khawaja (File)

இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் துவங்க இருக்கும் ஆஷஸ் தொடருக்கு பின் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க ஏற்கனவே திட்டமிடப்பட்டு உள்ளது ஆனால் தற்போது பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலைகளால் இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உஸ்மான் கவாஜா :

இந்நிலையில் பாகிஸ்தானில் பிறந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா தற்போது அங்கு நிலவும் மோசமான கிரிக்கெட் சூழ்நிலைகள் பற்றி இஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையதளத்தில்,

"வெளிநாட்டு வீரர்கள் மற்றும் நிர்வாகங்கள் பாகிஸ்தானுக்கு நோ சொல்வது மிகவும் எளிது, ஏனெனில் அது பாகிஸ்தான். ஒருவேளை அந்த இடத்தில் வங்கதேசமாக இருந்திருந்தால் கூட இதே நிலைமை தான் நடந்திருக்கும் ஆனால் அதே நிலைமையில் இந்தியா இருந்திருந்தால் யாரும் இந்தியாவுக்கு நோ சொல்லியிருக்க முடியாது"

என கூறிய அவர் அதே இடத்தில் இந்தியா இருந்திருந்தால் அவர்களுக்கு பயந்து கொண்டு மற்ற அணிகள் இந்த மாதிரி கிரிக்கெட் தொடரை பாதியிலேயே ரத்து செய்து இருக்காது என கூறினார்.

Photo By Pakistan Cricket

பணம் பேசுகிறது :

"பணம் பேசுகிறது என்பது நமக்கு தெரியும் அதுதான் இவை அனைத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. இருப்பினும் பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடுவதற்கு பாதுகாப்பான நாடு என ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது, எனவே மீண்டும் அங்கு நாம் செல்லக் கூடாது எனக் கூற எந்த காரணமும் இல்லை"

"பாகிஸ்தானில் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக நான் செய்திகளில் படிக்கிறேன், மேலும் பிஎஸ்எல் நடைபெறும்போது பாகிஸ்தானில் நான் விளையாடிய தருணங்களில் அங்கு விளையாடிய வீரர்களிடம் பாதுகாப்பு பற்றி நான் கேட்கையில் அவர்கள் "10 வருடங்களுக்கு முன்பு வேண்டுமானால் பாதுகாப்பு இல்லாமல் இருந்திருக்கலாம் ஆனால் தற்போது 100 சதவீத பாதுகாப்பு உள்ளது" என கூறினார்கள்"

என கவாஜா தெரிவித்துள்ளார். உலக அளவில் உள்ள கிரிக்கெட் வாரியங்களை விட இந்தியாவிடம் பணம் அதிகமாக இருப்பதால் அவர்களை யாரும் எதிர்த்து பேச தயாராக இல்லை என அவர் இந்தியாவை விமர்சித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தானில் தற்போது கிரிக்கெட் விளையாடுவதற்கு 100 சதவீத பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது என பாகிஸ்தானிற்கு தனது ஆதரவையும் தெரிவித்தார், ஆனால் இந்த விஷயத்தில் மீண்டும் மீண்டும் இந்தியாவை பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் உள்ளே இழுப்பது இந்திய ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.

Previous Post Next Post

Your Reaction