பாகிஸ்தானின் யுக்திகளை காப்பி அடித்து இந்திய கிரிக்கெட் வளர்ந்துள்ளது - உருட்டும் ரமீஸ் ராஜா

உலக அளவில் இந்திய கிரிக்கெட் அணி 3 வகையான கிரிக்கெட்டிலும் முதல் தரம் வாய்ந்த அணியாக திகழ்கிறது, 20ஆம் நூற்றாண்டில் சுமாரான அணியாக இருந்த இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போதைய 21ம் நூற்றாண்டில் உலக கிரிக்கெட்டின் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவாகியுள்ளது.

Ramiz Raja | Ravi Shastri (File)


கடந்த 20 வருடங்களில் டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, 2 சாம்பியன்ஸ் கோப்பை என அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் 2010 - 2011 மற்றும் 2016 முதல் 2020 வரை நம்பர் ஒன் அணியாக இருந்தது.

  • குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றிலேயே ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற ஆசிய அணி என்ற பெருமையும் கிடைத்தது, அத்துடன் சமீபகாலமாக இங்கிலாந்து போன்ற சவால் மிகுந்த நாடுகளில் கூட வெற்றி நடை போட்டு வருகிறது.

காப்பி அடிச்சாங்க :

இந்நிலையில் பாகிஸ்தானின் கடந்தகால யுத்திகளை கையாண்டு தான் இந்தியா இன்று இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா கூறியுள்ளார். இது பற்றி ஏஆர்ஒய் ஸ்போர்ட்ஸ் பக்கத்தில் அவர்,

"தாமதமாக ஆனாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் எல்லா நல்ல யுத்திகளுக்கும் இந்திய அணி தங்களை உட்படுத்தி மாற்றி கொண்டது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் எப்போதும் பாகிஸ்தான் அணியின் யுத்திகளால் ஈர்க்கப்பட்டார். மிகுந்த அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு தான் எங்களின் வழியாக இருந்தது, நாங்கள் 100% திறமை இல்லாத வீரர்களை பயன்படுத்தி எப்போதும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினோம்"

என கூறிய தற்போதைய இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாகிஸ்தானின் கடந்த கால கிரிக்கெட் யுக்திகளை பார்த்து எப்போதும் ஆச்சர்ய படுவார் என தெரிவித்தார், மேலும் பாகிஸ்தானின் கடந்தகால யுத்திகளை இந்தியா பின்பற்றியதால் தான் தற்போது இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என கூறினார்.

முன்னேற்றம் :

"அவர்கள் கிரிக்கெட் மாடலை எங்களின் வழியை போலவே மாற்றியுள்ளார்கள், திறமையில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள் இதன் காரணமாக அவர்களின் முதல் தர கிரிக்கெட் சிறப்பாக முன்னேறியுள்ளது, அது தான் அவர்களை அனைத்திலும் இணைக்கிறது. அவர்களைப் போல நாங்களும் நல்ல நிலையை எட்ட அடுத்த 3 - 4 வருடங்களுக்கு கடினமாக உழைக்க வேண்டியுள்ளது"

என தெரிவித்த ரமீஸ் ராஜா இந்தியாவின் கிரிக்கெட் மிக பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளதாகவும் அவர்களின் வழியை தற்போது தங்கள் கிரிக்கெட் வாரியம் பின்பற்ற வேண்டியுள்ளது எனவும் கூறினார்.

சொந்த மண்ணில் நடக்க இருந்த கிரிக்கெட் வீரர்களை நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் ரத்து செய்தன. இதன் காரணமாக ஏமாற்றம் அடைந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் அக்டோபரில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை தனது முதல் போட்டியில் சந்திக்கிறது. 

Previous Post Next Post

Your Reaction