பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருந்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த சுற்றுப் பயணங்களை ரத்து செய்து விட்டன.
![]() |
Ramiz Raja | Glenn Maxwell | Virat Kohli (Photo : Twitter) |
இதனால் கடும் விரக்தியில் ஆழ்ந்துள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் இதற்கு இந்தியாதான் காரணம் என வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார்கள்.
பயந்த ஆஸ்திரேலியா :
இந்நிலையில் சமீப காலமாக இந்தியாவிற்கு பயந்து ஆஸ்திரேலியா விளையாட துவங்கியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமேஷ் ராஜா மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்புகிறார். இதுபற்றி ஏஒய்ஆர் ஸ்போர்ட்ஸ் பக்கத்தில் அவர்,
"ஆஸ்திரேலியர்கள் பணத்துக்காக தங்களின் டிஎன்ஏவை மாற்றிக் கொண்டுள்ளனர், அவர்கள் இந்தியாவிற்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடும் தன்மையை மகிழ்ச்சியுடன் கைவிட்டுவிட்டார்கள். உலக அளவில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களும் ஏராளமான பணம் மற்றும் பரிசுகளுக்காக தங்களின் ஐபிஎல் கிரிக்கெட் ஒப்பந்தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்"
என கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். பொதுவாகவே கிரிக்கெட் வரலாற்றில் கடைசி பந்து வரை கூட எதிரணியிடம் அடிபணியாமல் ஆக்ரோசமாக விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா பெயர் போனவர்கள், உலகின் எந்த ஒரு இடத்திலும் எதிரணியை அதிர விடுவதில் ஆஸ்திரேலியா வல்லவர்கள்.
ஆனால் தற்போதெல்லாம் ஐபிஎல் ஒப்பந்தங்கள் பறிபோய்விடுமோ என்ற காரணத்தினால் ஆஸ்திரேலிய வீரர்கள் தற்போது இந்தியாவிற்கு பயந்து விளையாடத் தொடங்கி விட்டார்கள் என ரமீஸ் ராஜா கூறுகிறார்.
ஆஸ்திரேலியா மட்டுமல்லாது உலக அளவில் இருக்கும் வீரர்களும் இதே நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
ஏமாற்றி விட்டனர் :
நியூஸிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் தங்கள் நாட்டில் மேற்கொள்ள இருந்த கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது பற்றி அவர்,
"நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து இருவருமே எங்களுக்கு தவறு செய்துவிட்டார்கள், அது அவர்களின் விருப்பம். இதுபற்றி இனியும் விவரிக்க எதுவும் இல்லை ஏனெனில் அது எங்களின் தவறல்ல"
என கூறினார். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் பாகிஸ்தான் தொடரை ரத்து செய்துள்ளதால் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா போன்ற அணிகளும் பாகிஸ்தான் செல்வதற்கு யோசிக்கத் தொடங்கி விட்டனர்.