IPL 2021 : முதல் ஆளாக வெளியேறிய ஹைதராபாத் - காரணங்கள்

ஐபிஎல் 2021 தொடரின் லீக் சுற்றுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டது

Sun Raiser Hyderabad (Photo : Twitter)

இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் வெறும் 1 வெற்றி மட்டுமே பெற்று 8 தோல்விகளை அடைந்துள்ள அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறும் முதல் அணியாக நடையைக் கட்டி விட்டது.

  • இனி வரும் 5 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் கூட அந்த அணியால் இனி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது.

முன்னதாக சார்ஜாவில் நேற்று உட்பட இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் அந்த அணி பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் போராடி தோல்வி அடைந்தது எதிர்கொண்டது.

ஹைதெராபாத் அணிக்கு இந்த வருடம் ஐபிஎல் தொடரில் எதுவுமே சரிவர அமையவில்லை என்றே கூறலாம்.

இருப்பினும் அந்த அணியின் இந்த தோல்விக்கான சில காரணங்கள்:

1. கேப்டன் குழப்பம்:

சன் ரைசர்ஸ் என்ற அணி உருவாக்கியது முதல் அதன் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திரம் டேவிட் வார்னர் செயல்பட்டு வந்தார்.

  • மலை போல ரன்களைக் குவித்து 5 வருடங்களில் 2 முறை ஆரஞ்சு தொப்பிகளை வென்றதுடன் 2016ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தையும் டேவிட் வார்னர் அந்த அணிக்காக வென்று கொடுத்தார்.

இருப்பினும் இந்த சீசனில் திடீரென அவரின் கேப்டன்ஷிப் பொறுப்பு பாதியில் பறிக்கப்பட்டு கேன் வில்லியம்சனுக்கு வழங்கப்பட்டது.

கேப்டனாக பொறுப்பேற்றபின் கேன் வில்லியம்சனும் இந்த சீசனில் பெரிய இன்னிங்ஸ் எதுவும் ஆடி வெற்றியை தேடித் தரவில்லை.

ஒன்று இந்த சீசன் ஆரம்பத்திலேயே இந்த முடிவை செய்து இருக்க வேண்டும் அல்லது அடுத்த வருடம் கேப்டனை மாற்றியிருக்கலாம்.

சரியோ தவறோ "புட்ட பொம்ம" டான்ஸ் முதல் ஐபிஎல் கோப்பை வரை ஹைதராபாத் ரசிகர்களை மகிழ்வித்த டேவிட் வார்னரை பாதியிலேயே நீக்கியது அந்த அணியின் தோல்விக்காக முதல் காரணமாகும்.

Kane Williamson (Photo : BCCI/IPL)


2. மிடில் ஆர்டர் :

ஹைதெராபாத் அணிக்கு இந்த வருடம் மட்டுமல்லாது கடந்த சில வருடங்களாகவே மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்சனையாக இருந்து வருகிறது.

குறிப்பாக பெரிதும் நம்பியிருந்த மணிஷ் பாண்டே கடந்த சில வருடங்களாக ஒன்டே இன்னிங்ஸ் விளையாடி வருவது அந்த அந்த அணிக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

  • இந்த பிரச்சனையை சரிசெய்ய பாதியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரூதர்போர்டு தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே நாடு திரும்பும் நிலை ஏற்பட்டது.

மொத்தத்தில் அந்த அணியின் மோசமான மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை இந்த வருடத்தின் தோல்விக்கான முக்கிய காரணமாக அமைந்தது.

3. கேதார் ஜாதவ் :

கடந்த சீசனில் கேதார் ஜாதவ் செய்த லீலைகளை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் காலத்திற்கும் மறக்க மாட்டார்கள்.

அப்படிபட்ட அவரை இந்த சீசனில் வாங்கியது மட்டுமல்லாமல் பெஞ்சில் அமர வைத்து விட்டு இந்தியாவின் அண்டர் 19 அணியின் கேப்டன் இளம் பிரியம் கார்கிற்கு வாய்ப்பளித்து இருக்கலாம்.

அதை விட்டுவிட்டு தொடர்ந்து மிடில் ஆர்டரில் ஜாதாவுக்கு வாய்ப்பளிக்க அவர் தனது வேலையை காட்டி விட்டார்.

அவரை அணில் எடுத்தபோதே சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தோல்வி உறுதி என சென்னை ரசிகர்கள் போன வருடமே சமூக வலைதளங்களில் கூறியது உண்மையாகிவிட்டது.

4. தங்கராசு நடராஜன் :

ஹைதெராபாத் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன் இந்த வருடம் ஒரு சில போட்டிகளுக்கு பின் காயம் காரணமாக விலகினார்.

ஆனால் துபாயில் துவங்கிய ஐபிஎல் தொடரின் 2வது பாகத்திலும் துரதிர்ஷ்டவசமாக அவர் விலகியது அந்த அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

அடுத்த வருடம் நடைபெறும் 2022 மெகா ஏலத்தில் தரமான வீரர்களை எடுத்து நல்ல அணியை உருவாக்கி அடுத்த வருடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி நடை போட வேண்டும் என்பதே அந்த அணி ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Previous Post Next Post

Your Reaction