விராட் கோலி ஒருநாள் கேப்டன் பதவியிலும் விலக யோசனையளித்த ரவி சாஸ்திரி

துபாயில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 2021 டி20 உலகக் கோப்பையுடன் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி கடந்த வாரம் அறிவித்தார்.

Ravi Shastri | MS Dhoni | Virat Kohli ( Photo : Getty )


பணிச்சுமை காரணமாக இந்த முடிவை எடுப்பதாகவும் இருப்பினும் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனாக விளையாட இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இருப்பினும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு தொடர்ந்து கேப்டனாக செயல்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உலககோப்பை இல்லை :

கடந்த 2017 ஆம் ஆண்டு எம்எஸ் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியது முதல் இந்தியாவின் 3 விதமான கேப்டன் பொறுப்பையும் விராட் கோலி வகித்து வருகிறார், அவர் தலைமையில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டாலும் இதுவரை எந்த ஒரு உலக கோப்பையையும் வெற்றி பெற முடியவில்லை.

போதாக்குறைக்கு ஐபிஎல் தொடரிலும் அவர் கோப்பையை வெல்ல முடியாத காரணத்தால் இந்திய கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டுமென ஏற்கனவே கடந்த சில வருடங்களாக கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

முதல் தருணம்:

இருப்பினும் அவை அனைத்தையும் தாண்டி கேப்டனாக இருந்து வந்த அவர் கடந்த டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சொந்த காரணங்களுக்காக முதல் போட்டிக்கு பின்பு விலகினார்.

  • அந்த தொடரில் இந்தியா முதல் போட்டியில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுமோசமாக தத்தளித்த வேளையில் அவர் அணியை விட்டு சென்றார்.

Rohit Sharma | Virat Kohli (Photo : BCCI)

அப்படிப்பட்ட இந்திய கிரிக்கெட்டின் மோசமான தருணத்தில் இருந்து மீண்டு வந்த இந்தியா எஞ்சிய 3 போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு விராட் கோலி இல்லாமலேயே டெஸ்ட் தொடரை 2 - 1 என வென்று காட்டி சரித்திர சாதனை படைத்தது.

நிர்வாகத்தில் புகை :

அதுவரை விராட் கோலி பதவி விலக வேண்டும் என வெளியில் மட்டும் இருந்த பேச்சு அந்த தருணத்தில்தான் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திலும் எழ தொடங்கியதாக தெரிகிறது.

இதன் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டு டெஸ்டில் மட்டும் கேப்டனாக இருக்குமாறு பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விராட் கோலிக்கு ஆலோசனை தெரிவித்ததாக தற்போது தெரிய வருகிறது.

ரவி சாஸ்திரி யோசனை :

இது பற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர்,

"விராட் கோலியின் கேப்டன்சிப் பற்றிய பேச்சுக்கள் ஆஸ்திரேலியாவில் அவரில்லாமல் இந்தியா தொடரை வென்ற போது தான் முதல் முறையாக ஆரம்பித்தது, மேலும் திட்டமிட்டது போல் எதுவும் நடைபெறவில்லை எனில் 2023க்கு முன்பாகவே ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்தும் அவர் விலக வேண்டும் என்பதை அந்த தருணம் காட்டியது"

"இது பற்றி ரவிசாஸ்திரி விராட் கோலியுடன் 6 மாதத்திற்கு முன்பே பேசினார் ஆனால் அவர் அதற்கு செவி சாய்க்கவில்லை, அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் செய்ய இன்னும் விரும்புகிறார் என்பதாலேயே டி20 கேப்டன்ஷிப் பதவியில் மட்டும் இருந்து விலகியுள்ளார். அத்துடன் அணி நிர்வாகமும் ஒரு பேட்ஸ்மேனாக அவரை எப்படி உபயோகப்படுத்தலாம் என்பதைப் பற்றி விவாதிக்கத் துவங்கி விட்டது ஏனெனில் ஒரு வீரராக அவரிடம் இன்னும் நிறைய திறமைகள் உள்ளது"

என தெரிவித்தார். ஏற்கனவே கடந்த 2017 சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் 2019 உலக கோப்பை என 2 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விராட் கோலிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு விட்டது, ஆனால் அந்த 2 உலக கோப்பையிலும் அவர் தலைமையில் இந்தியா படுதோல்வி அடைந்து வெறுங்கையுடன் வெளியேறியது.

கடைசி வாய்ப்பு :

வரும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பையில் விராட் கோலி கேப்டன் செய்து செய்ய விரும்புவதாலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் அதற்கு முன்பாக எதிர்பார்த்தது போல் இந்தியாவின் வெற்றிகள் அமையவில்லை எனில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் விராட் கோலியின் கேப்டன்ஷிப் பற்றிய கேள்விகள் உலக கோப்பைக்கு முன்பாகவே எழுந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post Next Post

Your Reaction