- ஹைதெராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆப் ஸ்பின் பந்துகளை குறைவாக வீசிய ரவிச்சந்திரன் அஷ்வின்.
- முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி தான் காரணம் என கூறும் வீரேந்திர சேவாக்.
![]() |
Ravichandran Ashwin (Photo : BCCI/IPL) |
ஹைதெராபாத் அணிக்கு எதிராக நேற்று துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அன்றிச் நோர்ட்ஜெ மற்றும் ககிசோ ரபாடா சேர்ந்து 5 விக்கெட்டுகளை எடுத்து டெல்லியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
ரவிச்சந்திரன் அஷ்வின் :
வரும் அக்டோபரில் இதே துபாயில் நடைபெற உள்ள 2021 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்ததை நாம் அறிவோம், கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவிற்காக இவர் ஒரு டி20 போட்டியில் விளையாடி இருந்தார் .
இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வந்த அவரின் டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக ரசிகர்கள் எண்ணிய வேளையில் இந்த வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக கிடைத்துள்ளது என்றே கூறலாம், இருப்பினும் அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அஸ்வின் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
விக்கெட் இல்லை :
இந்த வேளையில் நேற்று துபாயில் நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 2.5 ஓவர்கள் வீசிய அவர் 22 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. ஒரு ஆப் ஸ்பின் பவுலரான அவர் டி20 கிரிக்கெட்டுக்காக கேரம் பால் உட்பட சில மாற்றங்களை செய்துள்ளார்.
இருப்பினும் அதற்காக அதையே அதிகப்படியாக உபயோகப் படுத்துவது தவறு என்றும் அதற்கு காரணம் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தான் என்றும் முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கூறுகிறார்.
இது பற்றி கிரிக்பஸ் இணையதள வீடியோவில் அவர்,
"ஆப் ஸ்பின் பந்துகளை வீசினால் யார் வேண்டுமானாலும் பவுண்டரி அல்லது சிக்சர்களை அடித்து விடுவார்கள் என்ற எண்ணத்தை ரவிசந்திரன் அஸ்வின் கொண்டுள்ளார், இந்த பயம் காரணமாக வேறு விதமான பந்துகளை உபயோகப்படுத்த மறுக்கிறார். எம்எஸ் தோனி விக்கெட் கீப்பர் கேப்டனாக இருந்தபோது அது போன்ற பரிசோதனைகளை செய்து பார்க்க அஸ்வினுக்கு அனுமதி கொடுக்கவில்லை. சில நேரங்களில் நம்மை பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் அடிக்கும் சமயத்தில் நமக்கு விக்கெட் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது என்பதை பவுலர் உணர வேண்டும்"
என கூறிய சேவாக் சமீபகாலமாக டி20 கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆப் ஸ்பின் பந்துகளை அதிகமாக உபயோக படுத்துவதில்லை எனவும் அதற்கு அஸ்வினை வளர்த்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஒரு முக்கிய காரணமாக அமைகிறார் எனவும் தெரிவித்தார்.
அவர் கூறியது போல ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் அடிப்படையான ஆப் ஸ்பின் பந்துகளை அதிகம் உபயோகப் படுத்தவில்லை. இதுபற்றி அவர்,
"அவர் தற்போது பந்துவீசும் முறையில் விக்கெட் விழும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. பேட்ஸ்மேன்கள் ஆப் ஸ்பின் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறும் போது எல்பிடபிள்யூ அல்லது போல்டாக வாய்ப்புள்ளது. அஸ்வின் ஒரு தரமான சீனியர் பந்துவீச்சாளர் என்றாலும் கூட அவர் மிடில் ஓவர்களில் விக்கெட்களை எடுத்து கொடுக்க வேண்டும்"
என தெரிவித்தார். ஆப் ஸ்பின் பந்துகளை வீசினால் பேட்ஸ்மேன்கள் அடித்து விடுவார்களோ என்ற பயத்திலேயே அனுபவம் வாய்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் வேறுவிதமான பந்துகளை பேசுகிறார், இதை அவரிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை என முன்னாள் இந்திய வீரர் ஆஷிஷ் நெஹ்ராவும் அஸ்வின் பந்துவீச்சை பற்றி தனது கருத்தை தெரிவித்தார்.