இந்தியாவில் நடைபெற்று வந்த உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 2021 தொடரின் சாம்பியன் பட்டத்தை இமாச்சல பிரதேசம் அணி முதல் முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது, முன்னதாக கடந்த டிசம்பர் 8ஆம் தேதியன்று இந்தியாவில் துவங்கிய இந்த தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கு பெற்றன.
Photo Credits : BCCI Domestic |
- அதில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் கலக்கிய இமாச்சல பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
பைனல்:
இதை அடுத்து நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு 314 ரன்களை எடுத்தது, ஒரு கட்டத்தில் 40/4 என தடுமாறிய தமிழ்நாடு அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் சதம் அடித்து 103 பந்துகளில் 116 ரன்கள் விளாசியதால் மிகப் பெரிய ஸ்கோரை எட்டியது.
இருப்பினும் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட தவறிய தமிழ்நாடு இமாச்சலின் 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்த காரணத்தால் அந்த அணி 6 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை எட்டிப் பிடித்து ஜெயதேவன் முறைப்படி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
பினிஷர் ஷாருக்கான்:
இந்த முக்கியமான இறுதிப் போட்டியில் சதமடித்து தமிழகத்தை தினேஷ் கார்த்திக் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் இணைந்து காப்பாற்றிய வேளையில் கடைசி நேரத்தில் களமிறங்கிய இளம் வீரர் ஷாருக்கான் தனக்கே உரித்தான பாணியில் வெறும் 21 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களை பறக்கவிட்டு 42 ரன்களை 200 என்ற மிகச் சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளாசி தமிழகத்திற்கு அபாரமான பினிஷிங் கொடுத்தார்.
- இது மட்டுமல்லாமல் இந்த கோப்பையின் முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் 66 ரன்கள், பெங்கால் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெறும் 12 பந்துகளில் 39 ரன்கள் விளாசிய இவர் நாக் அவுட் சுற்றான காலிறுதிப் போட்டியில் பலம் பொருந்திய கர்நாடகாவுக்கு எதிராக வெறும் 39 பந்துகளில் 79* ரன்களை விளாசினார், அரையிறுதியிலும் சவுராஷ்டிராவுக்கு எதிராக வெறும் 11 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார்.
சயீத் முஸ்தாக் அலி கோப்பை ஹீரோ:
அத்துடன் கடந்த மாதம் நடைபெற்ற சயீத் முஷ்டாக் அலி 20 கோப்பையில் கர்நாடகாவுக்கு எதிரான மாபெரும் இறுதி போட்டியில் வெறும் 15 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 33* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து தமிழகத்தை வெற்றி பெறச் செய்தார், குறிப்பாக அந்த போட்டியின் கடைசி பந்தில் வெற்றி 5 ரன்கள் தேவைப்பட்ட போது மெகா சிக்சர் விளாசிய ஷாருக்கான் தமிழ்நாட்டிற்கு சாம்பியன் பட்டத்தை வாங்கிக் கொடுத்தார்.
இப்படி தொடர்ந்து பேட்டிங்க்கு சவாலான கடைசி கட்ட நேரங்களில் களமிறங்கி குறைவான பந்துகளை எதிர்கொண்டு பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு ரன்களை குவித்து தமிழ்நாட்டிற்கு வெற்றிகளை தேடித்தந்த வரும் ஷாருக்கானை தமிழகத்தின் புதிய பினிஷெர் என்று கூறினால் அது மிகையாகாது.
- இது மட்டுமல்லாமல் கடந்த 2 சீசன்களாக ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இவர் கிடைத்த வாய்ப்புகளில் மிகச்சிறப்பாக ரன்கள் குவித்து கவனம் ஈர்த்தார்.
இந்தியாவில் வாய்ப்பு:
வளர்ந்து வரும் இளம் வீரராக இருக்கும் இவருக்கு வரும் ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என தமிழக ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள், ஒருவேளை இந்த தொடரில் வாய்ப்பு இல்லை என்றாலும் கூட வரும் பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பலாம்.
இளம் வீரராக இருப்பதால் இவருக்கு வாய்ப்பளித்து வளர்த்தால் நிச்சயமாக தமிழ்நாட்டைப் போல இந்தியாவிற்கும் பினிஷராக செயல்பட்டு இவர் வெற்றிகளை தேடித் தருவார் என்பதில் சந்தேகமில்லை.